எதிரணி ஆர்ப்பாட்டக்காரர் இரானில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கமும் கொண்ட காபந்து சபையின் தலைவராகவுள்ள கடும்போக்கு மதகுரு, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூடுதலானோருக்கு அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இரான் அதிகாரிகள் சென்ற வருடம் காட்டிய பலவீனம்தான் கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தன என்று அயதுல்லா அஹ்மத் ஜன்னதி என்ற அந்த மதகுரு கூறியுள்ளார்.
தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது அவர் இவற்றைத் தெரிவித்திருந்தார்.
இரானின் இஸ்லாமிய அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை இருவர் தூக்கிலிடப்பட்டனர்.