குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 16 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ்முதலமைச்சர் முதலில் தேசியமட்டத்தில் தோன்றக்கூடிய இடம் பொதுநலவாய அமைப்பு மாநாடு ஆகும்.

28.09.கி.ஆ2013-12.09.தி.ஆ2044-இன்று வடமாகாணம் என்ன சொல்லியிருக்கிறது. அறிவாளிக்கு முதலிட ம், விக்கினேசுவரன்) 1 37 255 வாக்குகள். போராளிக்கு இரண்டாம் இடம்.87 827( எழிலன்மனைவி-ஆனந்தி )அவர்களுக்கு. அடுத்து வழக்காடு மன்றத்திற்கு அருகமையில் கூட சத்தமிடக்கூடாது. எமது நாடுகளில் கோணடிக்கக்கூடாது.இது நீதித்துறைக்கு உலகு கொடுக்கும் உயர் மதிப்பு. நீதிபதியை நீதி அரசரை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்ற ஒரு உலகநியதி இருக்கு. அந்தவகையில் திரு. விக்கினேசுவரனை் அவர்களை தமிழர்கள் முதலில் மதித்துப்பழக வேண்டும். இன்று நவநீதம் பிள்ளைக்கு ஐ.நா.வில் உள்ள மரியாதை அவருக்கும் உண்டு என்பதை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. முதலில் நாம் மதிக்கப்பளகவேண்டும் பண்பாடு அவசியம். அரசியல் விமர்சம் வேறு தனிமனிதருக்கும் அவருடைய அறிவிற்கும் மதிப்பளிப்பதன் மூலம் அந்த இனம் உயர்ச்சி அடையமுடியும். முதலமைச்சர் தே.கூ. அமைப்பு என்பதைவிட முன்னாள் நீதிபதி கல்வியாளன் பண்பாளன் இறைகொள்கைவாதி என்ற உயர்நிலைகளில் மதம்மொழிகடந்து உச்சத்தில் நிற்கும் பெருமகனை தமிழர்கள் வடமாகாணத்தமிழர்கள் தமது தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் இது நாம் பட்ட அவலத்திற்கு கேவலத்திற்கு கடவுளே தந்த மிகப் பெரும் பரிசு என்று அதைப்பயன் படுத்தப் பக்குவப்படவேண்டும். தமிழினத்தில் குணத்தின்குன்று காமராசர் தமிழக முதலமைச்சர். அடுத்து அறிஞர் அண்ணா அதற்கு பின் தமிழர்களில் தோன்றிய அறிவாளித்தலைவர் விக்கினேசுவரன் அவ ர்களாகத்தான் இருக்கமுடியும். இதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். அவரை அரசியல் வாதியாகப் பார்ப்பது அரை வேக்காட்டுத் தனமாகும். தமிழர்களை கரம் போட் விளையாடிக் கொண்டிருந்தவர் களின் விரலுக்கு நிகச்சுத்தியாக விக்கி அவர்கள். இதனை தமிழர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இன்றைய தெற்கு முன்னாள் சனாதிபதிகளைக்கூட மதிப்பதில்லை. நீதியரசர்களையே துாக்கிப் பந்தாடியது. ஆனால் விக்கியின் அரசியல் நுழைவு அவர்களுக்கு வயிற்றைக்கலக்குவது புரிகிறது. இதைத்தமிழர்கள் பெரிதாக எடுக்கவேண்டும். மகாணசபை அதிகாரம் இவற்றை விடுத்து கல்வியாளனை மதித்தல் முதலமைச்சரை மதித்தல் இதற்குரிய பக்குவங்களை நாம்கற்றால் கற்பித்தால் மாகாணசபைக்கு தானாக வரும் மரியாதை அதிகாரம். இதனால் த.தே.கூ, கட்சிகள் அவரை உயர்வாக மதிக்கவேண்டும். அவருடன் மரியாதையாக நாம் பழகுவதன் மூலமே ஏனையவர்கள் எம்மினத்தை மதிக்கத் தொடங்குவார்கள். அதன்பின் எமக்கானவை எமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

முதலில் மாகாணசபை உறுப்பினர்கள், தே.கூ.அ. கட்சிக்காரர்கள். மதகுருமார்கள்,கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் கட்சிபாராது அரசியல் பாராது தமிழர்களின் முதல்வர் என்ற உயர்மரியாதை கொடுக்கவேண்டும். இந்தியசனாதிபதியை இந்தியர்கள் அமைச்சர்கள் பிரதமந்திரிகள் மதிப்பதாலே உலகநாடுகளும் மதிக்கின்றன. இதை உணருங்கள். அதற்கான நிதியை அரசு ஒதுக்குகின்றது. தமிழ்முதல மைச்சர் முதலில் தேசியமட்டத்தில் தோன்றக்கூடிய இடம் பொதுநலவாய அமைப்பு மாநாடு ஆகும். அதில் அவர் பங்கு கொள்ளும் போது இலங்கை சனாதிபதியை விட மதிக்கப்படுவார் முதன்மை பெறுவார் இதன் மூலம் நெல்சன் மண்டெலோ நிலைக்கு கிட்ட இவரை தமிழர்கள் உயர்த்த வேண்டும். எனவே அதற்கான நகர்வுகளில் தமிழர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அமைச்சர்களை ப் போடுவதில் அவரை ஈடுபத்தி ஒருசிலரின் விருபவீனத்திற்கு விட்டுவிடாதீர்கள். பல்கலைக்கழகங்கள் கல்லுாரிகள் கோவில்கள் தேவாலயங்கள் மசுதிகள் அவரைக் கௌரவிக்கவேண்டும். தமிழ் ஊடகங்கள் கட்சிகளை விமர்சிக்கலாம். மாகாணசபையை விமர்சிக்கலாம் ஆனால் முதலாவது முதலமைச்சரை அந்தநிலைக்கு கொண்டுபோகக்கூடாது. உண்மையில் தகுதி பண்பு ஆற்றல் மக்களை ஈர்க்கும் திறன் கொண்டுள்ளார். ஒரு வீச்சை ஏற்படுத்தக்கூடியவர் என்பதை இத்தேர்தல் உணர்த்தி யிருக் கிறது. சீனாப் பணங்களை தவிடுபொடியாக்கி இருக்கிறது. உலகவல்லரசுகள் பயப்பட்ட சீனாவை பயப்படவைத்திருக்கிறது. அதை நாம் உணரவேண்டும். அவரை மதித்துப்பழகுவதன் மூலம் தமிழர்கள் ஒரு தகுதியடைவார்கள் என்ற கருத்து உருவாகும்.

ஊடகங்கள் அவர் ஒரு நீதிபதி என்பதை கருத்தில் கொண்டு அவரை அணுகவேண்டும். அவரைநேர்காணல் செய்பவர்கள் பலதிறன் தகுதிகளை உருவாக்கிக் கொண்டு அவரருடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் ஒரு குறையுண்டு நேர்காணலை நடத்துபவர்தான் தான் எதோ தகுதியாளர்போலும் பேட்டி காணப்படுபவர் தரக்குறைவானவர் போலும் தான் தொலைக்காட்சி களில் வானொலிகளில் நான்பார்த்துள்ளேன். அந்தவிதத்தில் எடுத்துக்காட்டாக நேர்காணலில் மிகவும் தவறுகளை அதிகமாக செய்து கொண்டு இருந்தவர்கள் இன்று இல்லை. அதேதொலைக் காட்சியில் கலைஞர் என்பதற்காக தானே எல்லாம் என்று நடந்தவர்களும் உண்டு. முட்டாள்தனமான பேச்சுப் பேசக்கூடாது என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தியவர்களும் உண்டு. இது இங்கிலாந்தில் வாழ்ந்துகொண்டு இங்கிலாந்தில் இயங்கும் ஒரு தமிழ்தொலைக் காட்சியில் அறிவிப்பாளராக நிகழ்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நேரடியாக தொலைக்காட்சியில் பயன் படுத்திய சொற்களில் ஒன்று. அதேபோன்றுதான் இன்று இணையங்களுடாக நடத்தப்படும் வானொலிகள் நல்ல குரலாளர்களை வளமாகக் கொண்டு பல குறைபாடுகளைச் சந்திக்கின்றன. அண்மையில் திரு.விக்கினேசுவரன் அவர்களை ஒரு இணைய வானொலி ஒரு முதலமைச்சருடன் பேசுகின்றோம், ஒருமுன்னாள் நீதிபதியுடன் பேசுகின்றோம் என்று இல்லாது ஒரு இங்கிதமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதேதவறுகளை நாம் தொடர்ந்து செய்யக்கூடாது. எமது முதலமைச்சர் அவர்களை உலகஅரங்குகளுக்கு அனுப்பி உலகஅளவில் மரியாதையை உருவாக்குவோம் பின் எந்தவிடயம் என்றாலும் அவருடன் நேரடித் தொடர்புகளை உலகளவில் உருவாகிவிடும். அதனால் தமிழர்களின் கருத்து உலகில் எடுபடும். தமிழ் அமைச்சருக்கு இல்லாத மதிப்பு முதலமைச்சருக்கு உலகளவில் இருப்பதை உணர்வோம்.தமிழ்ச்சிற்றிதழ்கள்,இணையங்கள் இதனைக்கடைப்பிடிக்கவேண்டும் என்ற தாழ்மையான கருத்தை இன்றய முதமைக் கருத்தாக முன்வைக்கின்றேன்.

பூநகரி பொன்னம்பலம் .முருகவேள் ஆசிரியர்-சுவிற்சர்லாந்து. 28.09.2013-

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.