பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கின்ற காஷ்மீர் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் இரு பாகிஸ்தான் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக முசஃப்ராபாத்தில் இருக்கின்ற இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் கூறும்போது, இந்த தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் ராவலாகோட்டின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இஸ்லாமிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வந்து இருந்தாலும், பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தாக்குதல் இடம்பெற்றது என்பது அரிதாகவே இருந்து வந்ததாக செய்தியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.