குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வேண்டாம் என்ற மாகாணம் கோமணத்திற்கு கெஞ்சிக்கொண்டு டில்லிக்குப்போகும் நிலையை மகிந்தவை வைத்து நகர்த்தி

ய இந்தியா!22.06.கி.ஆ2013-07.06.தி.ஆ2044-1986-1987 இலங்கைத்தமிழர்கழுக்கு பாதகமான காலம் இந்தியா தனது மறைமுக நேரடி சித்துவிளையாட்டுகளை இலங்கை மீது காட்டியகாலம்.இதற்கு முற்பட்டகாலங்களில் ஆயுதங்களும் பயிற்சிகளும் கொடுத்து போராளிகள் பட்டம்கட்டி ஈழத்தமிழர்களை உசார்மடையர்களாக்கி தமக் குள் ஆயுதங்களால் மோதவைத்தது இந்தியா. தமிழகம் தமது அரசியல் இலாபங்களுக்காகவும் தமது உணர்ச்சி அரசியலுக்காகவும் ஈழஇளைஞர்களைப் பயன்படுத்தியது. டில்லிஇலங்கையின் மேற்கு தேசதொடர்புகளைத் துண்டிக்க கங்கணம்கட்டியது அதன் வெற்றி இப்போ தோல்வியாகி சீனாத்தொந்தறவாக மாறியதும் ஈழத் தமிழர் களில் கருணை உள்ளம் கொண்டு சன்னதமாட வேடம்தாங்கல் நிகழ்வில் இறங்கி நகர்கின்றது. சீனாவின் உறவை இலங்கை கைவிட்டது போல்நடித்தால் இந்தியா தமிழர்களைவிட இலங்கைக்கு சாதகமாகவே நடக்கும். அதன் ஆரம்பத்திற்கு மகிந்தவும் தயாராகிவிட்டார். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எந்தப்பாதகமும்  இல்லை என் பதன் மகிந்தவின் அறிவிப்புக்கு பரிமேளகர் உரை எழுதுவதாயின் 13 ஆம்திருத்தச்சட்டம் தமிழர்களுக்குப் பாதகம் இந்தியாவிற்கு அல்ல அதனால் இந்தியா கவலைப்படாது. இந்தியாவிற்கு பாதகமாக இலங்கைநடக்காது தமிழ ருக்கு பாதகமாக நாங்கள் நடந்தால் இந்தியா இலங்கைக்கைக்கு பாதுகாப்பு தரவேண்டும் 2009 இல் போன்று என்ற அர்த்தத்தில் காய்நகர்த்த இலங்கை அரசு புறப்பட்டுவிட்டது.

சுதுமலைக்கூட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மறைமுகமாக எதிர்த்தது. அதைவெளிக்காட்ட 27.யுலை.1987 இல் பூநகரி வாடியடிச்சந்தியில் இருந்த பூநகரி ஒல்லாந்தர் கோட்டை இராணுவமுகாம் தாக்கப்பட்டது. சுதுமலைக் கூட்டத்தில் பேசிய எல்லாத்தளபதிகளம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. தலைவரு க்காக ஏற் றுக் கொள்கின்றோம் என்ற ஒப்புதல்களை வழங்கினார்கள்.மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கின் றோம் என்றார்கள் அதே படையுடன் சண்டை செய்தார்கள். சண்டைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் புலிகள் இயக் கத் தைகலைக்க இந்தியாவிற்கு  ராயீவு காந்திக்கு ஒப்புதல்வழங்கி அந்தஇயக்கத்திலிருந்து விலகி சாதாரண வாழ்வு வாழச் செல்லும் இளையுர்களுக்கு நிதியென ஒரு தொகைப் பணமும் அமைப்புக்குகிடைத்ததாகவும் தகவல்கள். ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களுக்கு பாதைமாறலாம் இலச்சியம்மாறாது வாக்குறுதி.இந்தியாவிற்கு நாம்நீங்கள் கேட்டுக்கொள்வதற்கிணங்க ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம். நீங்கள் நிதிதரவேண்டும். இவை இரண்டையும் இரண்டுபக்கமும் கண்துடைப்பாகச் செய்தன. ஆனால் உண்மையாக அமைதிக்கான வழிகள் எட்டப்படவில்லை. தீர்வு போல் தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது இந்தியா. இலங்கைக்கு கண்ணடித்துக்கொண்டு இலங்கையின் வட க்கு கிழக்கு ஈழத்தமிழரின் தாயகம் என்பதை இந்தியஇலங்கை ஒப்பந்தம் ஏற்கின்றது என்று இலங்கைத் தமிழர்க ளைப் படுகுழியில் தள்ளியது. அது உண்மை என்பதாலே தான் வடக்கு கிழக்கை மகிந்த பிரித்தபோது இந்தியா மௌ னம் காத்தது. அதனால்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியா பொருட்படுத்தவில்லை என்று இல ங்கை எண்ணி நகர்ந்தது

தற்பொழுது மேற்குலகிற்குப்பதிலாக சீனா பெரியஆபத்தாக மாறிவருவதை உணர்ந்த இந்தியா இந்திய இராணுவவாநனுார்தியை சுதுமலைக்கு அனுப்பி பிரபாகரனை ஏற்றி (அதுதான் பிரபாகரனுக்கான முதலாம் முள்ளி வாய்க்கால்)டில்லியில் கறுப்பு
பூனைகளின் காவலில் சிறையடைத்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்க்கும்வரை பிரபாகரனைவிடுவதற்கு இந்தியா முடிவுஎடுக்கவில்லை. அமைதிப்படையாக இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக என்ற வேடம் போட்டமையால் தமிழகத்தை எதிர்த்து எம்.யீ.ஆர் ஆட்சியின் வலிமையை எதிர்த்து நகர்த்தத் தயங்கியது அதனால் உடனடிப் போரைத் தொடங்காது புலிகளுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்தது. அதில் மாத்தையா தலைவர் அதாவது பிரபாகரன்வந்து இந்திய இராணுவம் தமிழர்கள் பகுதியில் நுழையலாம் என்று இங்கு மண்ணில் வந்துநின்று விடுதலையாகச்(சுகந்திரமாகச்) சொல்லட்டும் நாம் இந்தியன் இராணுவம் முகாம்களுக்கு வெளியில் வந்து உலாவுவதை அனுமதிப்போம் என்று மக்களை வீத்க்கு அழைத்து போராடியமையும் இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தவே இந்தியா பிரபாகரனை மீண்டும் ஈழத்தில் இறக்கிவிட்டது. இதைச்சாதித்தவர் மாத்தையா. அதே மாத்தையாவுக்கு இந்தியாவாலும் பிரபாகரனாலும் என்ன கிடைத்தது எல்லாருக்கும் தெரியும்.

இதில் இந்தியா புலிகளைப்பலவீனப்படுத்துவதில் வெற்றிகண்டது. அதன்தொடர்ச்சி கிளிநொச்சி பத்திரிகையாளர்மாநாடு அது இரண்டாம் முள்ளிவாய்க்கால் பிரபாகரனுக்கு அதில் மாத்தையாபோல் பிரபாகரனின் போர் வெற்றிகளுக்கும் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் மிகவும் உறுதுணையானவர் கருணா அவர்கிழக்குமாகாணத்தின் நிர்வாகி கட்டுபாட்டாளர் என்பதை இந்தியா உணர்கிறது ஒரு பதிலிலிருந்து. மாத்தையாவை உடைத்தது போன்று கருணாவை 2002-2004 பகுதிகளில் உடைத்துவிட்டு ஆழிப்பேரலை அவலம்  ஓரளவுக்கு முடிந்ததும் போரர்நகர்வுகளுக்கு இலங்கை ஆயத்தமானது. இதன்பின்னணியாக இந்தியா இலங்கைக்கு சாதகமாக நகர்த்தியது.

2006 2007 2008 2009 போர் நிறைவு இந்தியா தம்மை எதிர்த்த புலிகள் அழிந்தார்கள் இலங்கை இனித்தமது சொல்லை கேட்டுக் கொண்டு நம்பிக்கொண்டு கைகட்டிக் கொண்டு இந்தியாவிற்குப்பின்னால்தான் நிற்கும் என்று 1987 யே ஆர் காலம் என்று கனவு கண்டது. காரணம் நிறைய இருக்கின்றது. மகிந்த சனாதிபதியாக இந்தியா முழுக்காரணம் அதனால் மகிந்த எப்படியும் இந்தியாவின் சொல்லைக்கேட்டுநடப்பார் என்று நம்பியது எதிர்பார்த்தது. அதுநடக்கவில்லை அதனால் த.தே.கூ. டில்லிக்கு அழைத்துப் பேசுகிறது. அன்று பிரபாகரன் தனிநபர் சிறையில் இன்று சம்பந்தன் தலமையில் இந்தியாவின் தந்திரத்திற்குள் தமிழர்கள் சிறைப்பட்டுவிட்டார்கள். பாருங்கள் வெளிநாட்டுதமிழர்களின் போராட்டங்களும் தமிழகப் போராட்டங்களையும் இந்தியா திறமையாக அடக்கிவிட்டது. இப்போ 1987 இல் வேண்டாம் என்ற மாகாணசபை என்ற கோமணத்தை ஆவது இழுத்துப்பிடிப்போம் என்ற கட்டதை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது. இனிஉலகை அழுத்தி மகிந்தவை வழிக்கு கொண்டுவரவும்  கூடும். அதிலும் தமிழர்களுக்கான தீர்வு இருக்காது சீனாவின் அக்கறையைக் குறைத்தல் மேற்குலக தலையீட்டைத்தடுத்தல் இலங்கையை இந்தியாவின் எண்ணத்திற்கு தாளம்போடவைத்தல் இவையே இந்தியாவின் நோக்கங்கள். தமிழர்பிரச்சனை தீர்க்க இந்தியா அக்கறையடைந்ததாக  இதுவரை இல்லை.

பூநகரி.பொ.முருகவேள்ஆசிரியர் சுவிற்சர்லாந்து.