ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிலரால் தாக்கப்பட்டு உடலில் எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பிரஜையின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விருந்துபசாரம் ஒன்றில் கலந்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 29 வயதான இந்த நபரின் உடல் மீது கும்பலொன்று திரவம் ஒன்றை வீசி தீ மூட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இனத் துவேசத்தால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவில்லையென பொலிசார் கூறுகின்றனர்.
மெல்பன் நகரில் இந்திய பட்டதாரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.