குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ரவுடி கும்பலால் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த தமிழக அமைச்சர்கள் இருவர், அவரைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஆழ்வார்க்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் என்பவர், சனிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஒரு கும்பல் அவர் மீது வெடிகுணடு வீசி, அரிவாளால் வெட்டியது.

அந்த நேரத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த வழியாக வந்தனர். அவர்களது கார்கள் அங்கு நின்றவுடன், சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய கும்பல் தப்பி ஓடியது. சாலையின் நடுவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவோ, முதலுதவி அளிக்கவோ நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்களும் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்ததாக நேற்று பல்வேறு தொலைக்காட்சிகளில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில், போலீஸ் அதிகாரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததையும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விலகி நின்று கொண்டிருந்ததையும், அதன்பிறகு அமைச்சருடன் சென்ற சிலர், ரத்தம் வழிந்துகொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் முகத்தில் தண்ணீரை ஊற்றியதையும் காண முடிந்தது. அத்துடன், அந்த போலீஸ் அதிகாரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் கையை நீட்டி உதவிக்கு அழைத்ததையும், பின்னர் மயங்கி விழுந்ததையும் அந்த வீடியோவில் காணக்கூடியதாக இருந்தது.

அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த போலீஸ் அதிகாரியைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. எதிர்க்கட்சியான அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, அந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இன்று சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் பன்னீர் செல்வம், போலீஸ் அதிகாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் காலதாமதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.