எகிப்திய கிறிஸ்தவர்களில் ஒருபிரிவான காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆறுபேரும், காவல்துறையைச்சேர்ந்த ஒருவரும், வாகனத்தில் வந்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து,
காப்டிக் கிறிஸ்தவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தின்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் உருவானது.
எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்திலிருந்து பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
காப்டிக் கிறித்தவர் ஒருவர், முஸ்லீம் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான துப்பாக்கிதாரி முஸ்லீம் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனாலும் இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குழுமிய ஆர்பாட்டக்காரர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டதைத்தொடர்ந்து இந்த மோதல்கள் உருவாயின.