உலகிலேயே மிக உயரமானக் கட்டிடம் என்று கூறப்படுகின்ற புர்ஜ் துபாய் என்ற புதிய கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது.
எண்ணூறறு மீட்டர்களுக்கும் அதிகமானது என்று கருதப்படும் இக்கட்டிடத்தின் துல்லியமான உயரம் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நூற்று அறுபது மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமைந்திருக்கும்.
துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவந்த சமயத்தில் இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எமிரேட்டுகளின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, செல்வச் செழிப்பு மிக்க தனது அண்டை ஊரான அபுதாபியால் மீட்கப்படவேண்டிய நிலைக்கு துபாய் தள்ளப்பட்டுள்ள ஒரு தருணத்ததில் இக்கட்டிடம் திறக்கப்படுகிறது.