பூநகரி ப.நோ.கூ.சங்கமானது தனதுசேவையை யேபுரம் முழங்காவிலுடன் மட்டுப்படுத்தியுள்ளது.இதனால் இச்சங்கத்தின் பயன்பாடு முழங்காவில் யேபுரம் வேரவில் பொன்னாவெளி.. நாச்சிக்குடா.. இரணைதீவுப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு மட்டுமே சேவைபுரிகின்றது.வாடியடி மட்டுவில் நாடு கறுக்காய்த்தீவு நல்லூர்.. ஆலங்கேணி.. தம்பிராய்.. செட்டியகுறிச்சி..சித்தங்குறிச்சி ஞானிமடம்.. கௌதாரிமுனை.. வில்லடி நாலாம்கட்டை போன்ற மக்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு கிளிநொச்சி கரச்சிப.நோ.கூ.சங்கம் தற்போது சேவைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பூநகரியின் பிரதான பகுதிக்கு வராமல் யேபுரம் பகுதிக்கு சென்றமைக்கு சங்கத்தில் உள்ளவர்களின் தற்காலிக வீடுகள் அங்கு இருந்தமையே காரணம்.
1977.. 1983 க் கலவரத்தின்போது மலையகத்திலிருந்து வந்த எதிலிகளுக்கே யேபுரக்கிராமத்த பூநகரி உதவிஅரசங்க அதிபர் பிரிவில் காடுவெட்டி உருவாக்கினர். வீடுகள்காணிகள்வழங்கப்பட்டது. மூன்றாண்டுகள் பயிர்செய்கை உபகரணங்கள் உடைகள் கிணறு வீதிகள் சிறுவர்பாடசாலைகள் என்பன இயங்கின. போர் மூண்டதும் அங்காடிவசதிகளும் தொழில் வசதிகளும் குறைய பள்ளிக்குடா கடல் மூலம் தமிழ்நாட்டுக்கும் தென்பகுதிக்கும் சென்றுவிட இடனர் மேற்குறித்ததிட்டத்தை பூநகரி உ.அ அதிபர் பிரிவின் காணிக்கச்சேரி உத்தியோகத்தர் ச.தில்லையம்பலம் சித்தங்குறிச்சி யேசிங்கம் மட்டுவில் ஆகிய நிர்வாகிகள் கனெமாக உழைத்திருந்தனர். இக்காணிகளும் வீடுகளும் மலையகமக்களுக்கே உரியது. இதில் திரு .வீ.ஆனந்தசங்கரி அவர்கள் உறுதியாகவுள்ளார்.