அந்நிய சக்திகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல் கொய்தா தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல் காரணமாக யேமனில் இருக்கின்ற தூதரகத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மூடியுள்ளன. யேமனில் இருக்கின்ற அமெரிக்க பிரஜைகள் மிகவும் உஷாராக இருக்குமாறு அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையே, பயங்கரவாத எதிர்ப்பில் யேமனுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் பேச்சுக்கள் நடத்தியுள்ளார். இதன் போது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.