பிரகீத் எக்னலி கொட என்ற அரசியல் விமர்சகர் 2010 ஜனவரி 24 அன்று காணாமல் போய் விட்டார். சண்டே லீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க என்பவர் 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். சிரச என்னும் பத்திரிகை நிறுவனம் 2009 சனவரியில் தாக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டுசனவரி மாதம் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு யுலை மாதம் உதயன் எனும் தமிழ்ப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஞானசுந்தரம் என்பவர் தாக்கப்பட்டார். ராசபசசனாதிபதியான பிறகு ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஒரு பத்திரிகையாளர் காணாமல் போய்விட்டார். இலங்கையில் ராயபசஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகையாளர்களும் என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி