இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.
தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இடம்பெறுகின்ற இ.தொ.க, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே தான் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாகவும் யோகராஜன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை தான் ஆதரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி-பிபிசி