பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் அப்துல் கலாம் பேசியதாவது:-
அறிவியலின் மதிப்பை மக்களிடையே பெருமளவில் பரப்ப வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பங்களிப்பு இருப்பதை உணர வேண்டும். இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் மனதில் அறிவியல் என்றாலே இருக்கக்கூடிய ஒருவித பயத்தை போக்கும் வகையில், நாடு முழுவதும் அறிவியல் பொருட்காட்சி மற்றும் ஆய்வங்கள் அமைக்க வேண்டும். கிராமங்களில் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்கவேண்டும்.
எனக்கும் பீகாரும் நெருக்கமான தொடர்பு உண்டு. குறிப்பாக நிதிஷ்குமார் ரெயில்வே மந்திரியாக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களிடையே அமைதி மற்றும் செழுமையை வளர்ப்பதற்கும் அவர் பாடுபட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்வர் நிதிச்குமார் பேசுகையில், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அறிவியல் உதவுகிறது என்றும், அறிவியல் பாடங்களை படிப்பதில் குழந்தைகள் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.