குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.

 

 

உள்வீட்டுக்காரர்
எதிர்வீட்டுக்காரர் ஆகி
இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு

அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.

கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை

ஊரவர்கள் கையாள்வார்கள்.
தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு
கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
குரங்குகள் இறங்கிவந்து மிளகாய்ப்பொடியை கையில்பிரட்டும்
அகோரமாய் எரிவு உண்டாகும்... அதே கையால் தங்கள் கண்களில்
மூஞ்சையில் பின்பகுதியில் நாக்கில் பிரட்டிவிட்டு
கோபங்கொண்டு கொட்டன்களை எடுத்து தங்களுக்கு தாங்களே
அடிபட்டுச் செத்துப்போகும் எந்தச்செலவும் இல்லாது

 

தோட்டக்காவல் நிகழ்ந்துவிடும்.

இதுமுன்பு தமிழ்க்குழுக்களிடையே நிகழ்த்தப்பட்டது.தற்போது

தமழ்கட்சிகளிடையே பயன்படுத்தப்படுகிறது.. இப்போ தேர்தலில்

வேட்பாளர்களிடையேயும் இந்த குரங்குக்காவலையே

நிகழ்த்துகிறார்கள்.

வெள்ளைத்தோட்டக்காரர்கள் வினையை சிங்களத் தரப்பபுக்குள்

புகுத்தியுள்ளார்கள்.

செலவும் செய்மதியும் இல்லாது நடந்த உண்மைகளை..

ஆதாரங்களை. முள்ளுமில்லாது கத்தியுமில்லாது

தோண்டிஎடுக்கிறார்கள் இறக்கப்போவது குரங்குகள்.. வெல்வது

குரங்குகாவல் முறையை உருவாக்கிய

வெள்ளைத்தோட்டக்காரர்கள்.

தமிழ்த்தரப்பு இக்காலத்தை வெற்றிதோல்விக்கப்பால் நன்கு

பயன்படுத்தும் நிபுணத்துவத்தை கையாளவேண்டும்.இதுவரை

துன்பப்பட்டவர்கள் தமிழர்கள் அவர்கள் உணர்வுடன்

வாழ்ந்தார்கள்...இன்றைய..எதிர்கால நிலையை கருத்தில்கொண்டு

அவர்களை யாருக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக

கூறவேண்டியதுதானே.இதைவிடுத்து தமது இருக்கை

பற்றியோசித்து எந்த வாலைப்பிடிப்பது என்று தடுமாறுகிறார்கள்

என்பது தெரிகிறது.

யாழ்தாடிவேட்டி கட்சிக்காரர்கள் தமது சனநாயக

விரோதப்போக்கை மறைக்கவும்...சில அபிவிருத்திகளை காட்டி

வேலைவாய்ப்புக்களை வழங்கி ... வாசிகசாலைகளுக்கு மை

தடவி  இடமாற்று சலுகைகளும் பதவி உயர்வுகளும் கொடுத்து

தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள்.

வவுனியா தாடிகோட் கட்சிக்காரர்கள் வவுனியா துன்ப

நிகழ்வுகளில் இருந்து தப்பி சில சலுகைகளை காட்டி

வெற்றிலைக்கு ஆதரவளித்து வெற்றி உலாவர

எண்ணுகிறார்கள்.இவர்களை எல்லாம் சேர்த்து

 

போர்க்குற்றத்திலிருந்து தப்ப பெரியவர்கள் முயல்கிறார்கள்.

 

2009 இல் இலங்கையை வழிநடத்தியது யார்?

 

28.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.

2009 இல் இலங்கையின் நிர்வாகியார்? இராணுவத்தீர்வு என்று

நின்றது யார்?

சார்க்மாநாட்டை இலங்கையில் நடத்தி..    இதற்கு காவல்காக்க

கப்பலில் வந்து நின்றது யார்?  இவர்கள் திரும்பிச்சென்றார்களா?

போரின்போது  எத்தனை பேர் நின்றார்கள்? இதிலிருந்து இந்த

ஆண்டு (2009) யார் இலங்கையை  நிர்வகித்தது என்பதுபுரியும்.

 

மதிப்புக்குரிய இந்ததொப்பிக்காரனின் எண்ணத்துக்கு இங்கே தாளம்

போட்டது யார்? இங்கு இருந்த ப.தொப்பிக்காரனா? அல்லது

சி.துண்டுக்காரனா? இந்தப்பிடுங்குப்பாட்டாலேதான் இன்று இழுபறி

மக்களுக்கு சேவைசெய்யவந்தவர்கள் ஏன் சில இடத்தில் மட்டும்

நின்று சிகிச்சை அளித்தனர்? சிலவைத்தியசாலைகளில்

சிறுபாதிப்பு உள்ள உறுப்புகளும் அகற்றப்பட்டதாம் உண்மையா?

மறக்கலாமா? சில வைத்தியசாலைகளில் கருவறுப்பு நடந்ததாம்

உண்மையா? வன்னியில் ஊனமுற்றவர்கள் எங்கே? மருந்துக்கு

போனவர் சவக்காம்பறாக்குள் அடையாளம் காணப்பட்டார். அவர்

சாவீட்டுக்கு  பிள்ளையே  வரமுடியவில்லை.

நலன்புரிநிலையத்தில் மனிதநேயச்சட்டமாம் உணவை

எறிந்தார்களாம்.இயலாதவர்கள் மிதிபட்டு  இறந்தார்களாம்.

நகைகளை தமிழர்களும் அறாவிலைக்கு வாங்கினார்களாம்..

உணவிற்கு ஏலம்போட்டுபேரம் பேசினார்களாம்...

சேர்வைப்போத்தலில் உறவுகளுக்கு உசார்பானம்

கொடுத்தார்களாம்.. விடயத்திற்கு வருவோம்....இலங்கையர் என்று

தன்னாதிக்கமாய் நின்றது யார்?

தொப்பித்தாடிக்கு பொம்மை ஆடியது யார்? சி.துண்டா?

 

ப.தொப்பியா?