அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் சென்றிரங்கவிருந்த ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க நைஜீரியப் பிரஜை ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு முயன்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பரந்துபட்ட கொள்கை மீளாய்வுகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் கண்காணிக்கப்படுவோர் பட்டியல் பயன்படுத்தப்படும் விதம் மீளாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்த முயன்ற உமர் ஃபாரூக் அப்துல் முதல்லப் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், அவருக்கு ஏன் அமெரிக்க விசா வழங்கப்பட்டது என்று குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.