இதற்கு முன்பு, அவுசுதிரேலியா சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன், ஆசிய விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும்.
இந்தியா மற்றும் அவுசுதிரேலியா இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தியா அவுசுதிரேலியா இடையே இராணுவ கூட்டு பயிற்சி நடந்தால் அதை அமெரிக்கா வரவேற்கும் என இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க யப்பான் விருப்பம்
இந்தியா மற்றும் யப்பான் இடையே கனிம இறக்குமதி மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமர் மன்மோகன் சிங் தனது யப்பான் பயணத்தை இரத்து செய்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவில் யப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோசிரோ யெம்பா மற்றும் யப்பானுக்கான இந்திய தூதர் தீபா வாத்வா இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 4 ஆயிரம் தொன் கனிமங்கள் யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
தற்போது இந்த கனிமங்கள் சீனாவிலிருந்து யப்பான் இறக்குமதி செய்து வருகிறது.
இதன்மூலம் சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க யப்பான் விரும்புகிறது.
மேலும் இந்த கனிமங்கள் மூலம் மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள், கைபிரிட் கார்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.
அடுத்ததாக, சமூக நல ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளிலும் தங்கி வேலைபார்த்து வரும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
சனநாயகம் மலர காந்திய வழியை பின்பற்றினேன்: ஆங் சான் சூச்சி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சான் சூச்சி டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: எனது அறவழி போராட்டத்திற்கு தூண்டுதாலாக இருந்தவர் மகாத்மா காந்தி தான்.
எனது நாட்டில் சனநாயகம் மலர நான் நடத்திய இயக்கத்திற்கு காந்திய வழியைத்தான் பின்பற்றினேன் என்றார்.
பின்னர் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி பேசுகையில், மியான்மரில் ஜனநாயகம் தழைக்க சூச்சியின் போராட்டம் பாராட்டுதலுக்குரியது என்றார்.
புதுடெல்லி ராய்காட்டில் மகாத்மா காந்தி சமாதியில் மியான்மார் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கீ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.