குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

புலம்பெயர்ந்தோரிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்: வலதுசாரிகள் கோரிக்கை தமிழ் இளைஞர் பலர் நன்மை பெறலாம்.

16.11.2012-புலம்பெயர்ந்ததோருக்கான சட்டங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான சில விதிமுறைகளை அரசு சாரா அகதிகள் குழுவும் ஆம்னெசுட்டி இண்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பும் வகுத்துள்ளன.

இந்த மனித உரிமை அமைப்பின் பிரிவுக்கு இயக்குனராக இருக்கும் மேனோன் சிக் புலம் பெயர்ந்தோருக்கு உள்ள சிக்கலான நிலைமையை மாற்ற வேண்டும் என்றார்.

கடுமையான கொள்கைகள் அதன் இலக்குகளை அடைவதில்லை, நியாயமற்ற முறையில் அப்பாவி மக்களைத் தண்டிக்கவே இச்சட்டங்கள் உதவுகின்றன. இம்மக்கள் ஸ்விட்சர்லாந்துக்கு பிழைப்புத் தேடி வருகின்றனர். அவர்களை சட்டத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது என்று ஷிக் கூறினார்.

புலம்பெயர்ந்தோரிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அநியாயமாகத் தண்டிக்கக் கூடாது என்று அரசிடம் வலதுசாரிகளும் அரசு சாரா அமைப்புகளும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இதன் விளைவாக அரசு சாரா அமைப்புகள் சில இணைந்து மத்தியக் கூட்டரசிடம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளின் பட்டியலை போன மாதம் அளித்தன. அத்துடன் அரசியல் கட்சிகளும் மாநில அதிகாரிகளும், பொதுமக்கள் பிரதிநிதிகளும் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையரும் கூடி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த அமைப்புகள் அளித்த விதிமுறைப் பட்டியலில் ஒன்பது முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அகதிகளாக வருவோருக்கான இலவசச் சட்ட அறிவுரைகளாக ஒளிவுமறைவின்றி நியாயமான சட்ட நடைமுறைகளாக உள்ளன.

 

புகலிடம் நாடி வருதல் என்பது சுற்றுலா வருவது கிடையாது. எனவே சிலருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது அறவே கூடாது. வருகின்ற அனைவரும் வாழவழியற்றவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றார் சுவிசு அகதிகள் குழுவின் சூசன் போல்சு.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.