இதற்கு செவி சாய்த்த ஐ.நா பாதுகாப்புக் குழு கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதம் ஒரு குறைகேட்பு அதிகாரியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஐ.நா தூதரான பால் செகர் கூறுகையில், ஐ.நாவின் இந்தத் தீர்மானம் மனித உரிமைகளையும் சட்டத்தின் அதிகாரத்தையும் மதிக்கும் நல்ல முடிவாகும். பாரபட்சமில்லாத நேர்மையாகச் சுதந்திரமாகச் செயல்படும் நீதிமன்றத்தில் நியாயமாகவும் எவ்வித ஒளிவு மறைவின்றியும் வழக்குகள் நடத்தும் உரிமையை ஐ.நா வின் இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது என்றார்.
அல்கொய்தா எதிர்ப்புக்கான தடைகளுக்கு மட்டுமின்றி ஐநா தற்போது விதித்துள்ள அனைத்துத் தடைகளுக்கும் உள்ளான அமைப்பு மற்றும் நபர்களுக்குமாக இந்த குறைகேட்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்தள்ளது.