முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு கலாமை நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது அவர் கலாமை பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாடம் நடத்த வருமாறு அழைத்தார். கலாமும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் நாளை பீகிங் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்.
இது குறித்து கலாம் கூறுகையில்,
நான் ஒரு ஆசிரியர். நான் அமெரிக்காவில் பாடம் நடத்துகிறேன். இளைஞர்களை சந்தித்து அவர்கள் அறிவை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.
விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய கலாம் இந்தியாவின் சனாதிபதியானார். அதன் பிறகு அவர் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவ-மாணவியரை சந்தித்து உரையாடி மகிழ்கிறார்.