குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வாங்க: கலாமுக்கு சீனா அழைப்பு

04.11.2012- பீகிங்: பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமாறு முன்னாள் சனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு கலாமை நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது அவர் கலாமை பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாடம் நடத்த வருமாறு அழைத்தார். கலாமும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் நாளை பீகிங் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசவிருக்கிறார்.

இது குறித்து கலாம் கூறுகையில்,

நான் ஒரு ஆசிரியர். நான் அமெரிக்காவில் பாடம் நடத்துகிறேன். இளைஞர்களை சந்தித்து அவர்கள் அறிவை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.

விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் துவங்கிய கலாம் இந்தியாவின் சனாதிபதியானார். அதன் பிறகு அவர் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவ-மாணவியரை சந்தித்து உரையாடி மகிழ்கிறார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.