குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

ஈராக் சிறையில் கலவரம்: 12 பொலிசார் பலி, 83 கைதிகள் தப்பியோட்டம்

29.09.2012-ஈராக்கில் உள்ள சிறைச்சாலையில் பொலிசாருக்கும், சிறைக் கைதிகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் 12 பொலிசார் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சலாஹிதின் மாகாணத்தில் டிக்ரிட் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கும், பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

இதில் 12 பொலிசார் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

மேலும் இச் சிறைச்சாலையிலிருந்து 83 கைதிகள் தப்பியோடி உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத குழுவொன்று, இப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சலாஹிதின் மாகாண துணை கவர்னர் அப்துல் ஜாபர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் 83 கைதிகள் தப்பிக்க பயங்கரவாதிகள் காரணமாக இருந்தனர்.

இதனை ‌சிறைச்சாலை பொலிசார் தடுத்ததால் தான் இன்று சிறையில் வன்முறை ஏற்பட்டது. இதில் 15 பொலிசார், 7 கைதிகள் உள்பட 22 பேர் பலியாகியிருக்கலாம் என்றார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.