இதில் 12 பொலிசார் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
மேலும் இச் சிறைச்சாலையிலிருந்து 83 கைதிகள் தப்பியோடி உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத குழுவொன்று, இப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சலாஹிதின் மாகாண துணை கவர்னர் அப்துல் ஜாபர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் 83 கைதிகள் தப்பிக்க பயங்கரவாதிகள் காரணமாக இருந்தனர்.
இதனை சிறைச்சாலை பொலிசார் தடுத்ததால் தான் இன்று சிறையில் வன்முறை ஏற்பட்டது. இதில் 15 பொலிசார், 7 கைதிகள் உள்பட 22 பேர் பலியாகியிருக்கலாம் என்றார்.