தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.
இந்நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில்தான் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் பல்வேறு பகுதிகளி்ல் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையின் வரவு குறித்து எந்தத் தகவலையும் முன்பே தெரிவித்தாக வானிலை மையம், இந்த திடீர் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பெரும் மிரட்டலாக வந்த இந்த திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.