நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் கொலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசு, இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால், அமெரிக்க எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான இலி வீசெல், அமெரிக்க நடிகையும் பாடகியுமான மோனிக் கோல்மேன் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐசுவர்யா ராய் இந்த ஆண்டு நடந்த உலக அமைதி தினத்தில் பங்கேற்றது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரமாக கருதுகிறேன்.
உலக அமைதிக்காக உதவ வேண்டும் என்று நோக்கத்துக்காக நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம் என்றார்.