குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

வளைந்து போகாதவரால் வளைகுடாவில் போர்வருமோ?எங்களை தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் சனாதிபதி

22.09.2012-எங்களது விடயத்தில் இசுரேல், அமெரிக்கா அத்துமீறி நடந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சனாதிபதி முகமது அகமது நியாத் கூறியுள்ளார்.

ஈரான் - ஈராக் இடையே கடந்த 1980-1988ஆம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள் நேற்று ஈரானில் அனுசரிக்கப்பட்டது.

 

இதையொட்டி ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பை நடத்தினர்.

 

இதில் நூற்றுக்கணக்கான இராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன.

 

அப்போது தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் கூறுகையில், ஈரான்- ஈராக் இடையே போர் நடந்த போது நமது வீரர்கள் காட்டிய அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன் உலக சக்திகளிடம் இருந்து தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தல்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

 

ஈரான் விடயத்தில் அத்து மீறி நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.

 

இதற்கிடையில் ஈரான் இராணுவ தளபதி அதோல்லா செலேகி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், ஈரானிடம் வாலாட்டினால் இஸ்ரேலை இல்லாமல் செய்து விடுவோம். எங்களது பலத்தை காட்டும் வகையில் அணி வகுப்பு நடந்தது. யாரையும் மிரட்டும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.