ஏமன் நாட்டுப் படையினர்ஏமன் நாட்டின் வடக்கிலும் , தெற்கிலும் மூன்று இடங்களில் உள்ள பயிற்சித்தளங்கள் மற்றும் மறைவிடங்களில் விமானப்படையின் ஆதரவுடன், தமது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 அல்கயீதாவினர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஏமன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பள்ளிக்கூடங்கள் உட்பட உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இவை குறித்து பக்கசார்பற்ற வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால், உள்ளூரில் உள்ள பாதுகாப்பு துறையினரின் இலக்குகள் மீது அண்மைய மாதங்களில் அல்கயீதாவினர் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
ஏமன் அல் கைதாவினரின் பலம் மிக்க இடமாக மாறிவருவது குறித்து அமெரிக்க கவலை வெளியிட்டிருந்தது.