வறிய நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை கையள்வதற்காக உதவும் வகையில் வருடாந்தம் 100 பில்லியன் டாலர்களை வழங்குவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த உறுதிமொழி, மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் விவரித்துள்ளார்.
கார்பன் வெட்டு இலக்குகள் குறித்தும், வளரும் நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் இந்த விடயத்தில் எவ்வளவு உதவலாம் என்பது குறித்தும், தம்மால் அறிவிக்கப்பட்ட இலக்குகளை கோபன்ஹேகன் மாநாடு எட்டுமா என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அந்த மாநாடு தனது இறுதி இரு நாட்களுக்குள் தற்போது நுழைந்துள்ளது. ஆனால், இன்னமும் கலந்துகொண்டோர் மத்தியில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.