30.08.2012-நிலவில் முதன் முறையாக கால்வைத்த நீல் ஆம்சுட்ராங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கு முதன் முதலாக சென்று பூமிக்கு திரும்பிய பின் நீல் ஆம்சுட்ராங் பல்வேறு நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.
அப்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்.
இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் ஆம்ஸ்ட்ராங், நிலவில் இறங்கிய போது அதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, இந்திராகாந்தி தூங்காமல் விழித்திருந்ததாக அவர் அமைச்சரவையில் இருந்த நட்வர்சிங் தெரிவித்தார்.
இதை கேட்ட ஆம்ஸ்ட்ராங், என்னால் உங்களது தூக்கம் கெட்டு விட்டது. இதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
அடுத்த முறை நிலவுக்கு செல்லக்கூடிய வாய்ப்பிருந்தால் காலம் தாழ்ந்து செல்கிறேன் என தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர்சிங் இத்தகவலை தெரிவித்தார்.