சைப்ரஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டஸ்ஸோஸ் பப்பாடுபுலோஸின் சடலத்தை, சவக்குழியைத் தோண்டி திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
வியாழன் இரவு நடந்திருப்பதாய்த் தெரியுமிந்த திருட்டுச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலைதான் தெரியவந்ததுள்ளது.
அதிபர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை வரவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது ஒரு மோசமான குற்றம் என்று கூறி கிரேக்க இன சைப்ரஸ் மக்களின் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிபரின் சடலத்தை யார் திருடியிருப்பார்கள் எதற்காக இதனைச் செய்திருப்பார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.