சென்சோ – 9 என்ற ஏவுகணை மூலமாக விண்வெளிக்கு சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் அங்கிருந்த விண்வெளிக் கூடத்திற்குள் நுழைந்தனர். இதனை சீனாவின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டது.
யிங் காய்பெங் என்பவரும், லியு வாங் என்ற பெண் விஞ்ஞானியும் இந்த ஆய்வுக் கூடத்தில் இருக்கும் காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ஒரு மணி நேரத்துக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இரண்டு விண்கலங்களை அருகருகே கொண்டு வந்து ஒன்றிலிருந்த ஆட்களை மற்றொன்றுக்கு மாற்றுவது கடினமான பணியாகும். இந்தச் சவாலான பணியில் இப்போது சீனா வெற்றி வாகை சூடியுள்ளது.