தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபற்றி கேட்டால் நாங்கள் உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளது என்கிறார்கள். மக்கள், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஓட்டு போட்டார்களா, அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்களா? சட்டமன்ற தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கால் அதிமுக வெற்றிபெற்றதாக கூறுகிறார்கள். 2004 மக்களவை தேர்தலிலும் யெயலலிதா 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது 40 தொகுதிகளிலும் அதிமுக அணி தோற்றது. ஏன் அப்போது வெற்றிபெறமுடியவில்லை. சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பேசமுடியவில்லை. எந்த கேள்விக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. எல்லாவற்றுக்கும் 110 விதியின் கீழ் யெயலலிதாவே அறிக்கை படித்து விடுகிறார்.
எந்த அமைச்சரும் பதில்சொல்வதில்லை. மாறாக யெயலலிதா பேசும்போது அமைச்சர்கள் மேசையை மட்டும் தட்டுகிறார்கள். இவ்வாறு விசயகாந்த் பேசினார். கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.