இந்த அறிக்கையில் உலக ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கான 5 சதவீதத்தையும் இந்தியா தாண்டி விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார் அந்தோனி.
ஆயுத இறக்குமதியில் சீனாவை இந்தியா விஞ்சிவிட்டதா என்கிற கேள்விக்கு அந்தோனி மேற்கண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்தார். ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் மூலமாகத் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் பாதுகாப்பு அச் சுறுத்தலையும் சவால்களையும் கணித்து அதற்கு ஏற்ப ஆயுதக் கொள்முதல் செய்யப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
15 ஆண்டு கால ஒருங்கிணைந்த திட்டம், 5 ஆண்டு ராணுவ கொள்முதல் திட்டம், வருடாந்திர கொள்முதல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொள்முதல் செய்யப்படுவ தாகவும் அவர் கூறினார்.