குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

மதுரை பாயக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

11.05.2012-மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாயகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுச்மா சுவராச்ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட பாயகவின் தேசிய செயலர் முரளிதரராவ், இலங்கை தமிழர் விவகாரம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாயகவின் மூத்த தலைவர் அத்வானியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுசசமாசுவராசும் விளக்கிக் கூறவுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுசமா சுவராச் அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேவேளை, கட்சியின் மூத்ததலைவர் அத்வானி ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், பாயகவின் நிலை குறித்தும் எடுத்துக் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயலர் முரளிதரராவ் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.