காரைக்குடி அழ கப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன் னாள் குடியரசுத் தலை வர் அப்துல்கலாம் பேசியதாவது:
இந்தியாவில் 60 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைஞர் கள் தான் இன்றைய இந்தியாவின் சொத்து. எனவே நான் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வரு கிறேன். புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கஇன்றைய இளையசமுதாயத்தினர் முன்வர வேண்டும். சுற் றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொரு மாணவரும் 10 மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி யில் பள்ளி மாணவி ஒருவர்,இந்தியா அமைதியான நாடு என கூறி வரும் நிலையில் அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியமா என கேள்வி எழுப் பினார். இதற்கு கலாம் பதில் கூறுகையில், அந் நிய நாடுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம். நாட்டை வலிமைப்படுத் தவும், பாதுகாக்கவும் அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு மிக அவசியம் என்றார்.