ரச்யாவில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியவர் விளாமிடிர் லெனின். ரச்யாவின் சனாதிபதியாக லெனின் பதவி வகித்த காலத்தில், அவருக்கு பின் சனாதிபதி பொறுப்பை ஏற்கக்கூடிய வகையில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக விளங்கியவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்சுகி ஆவர்.
தொடக்க காலத்தில் லெனின், சுடாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்சுகிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் சுடாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிசுட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார் ரசிய வரலாற்று ஆய்வாளர் லெ லுரி.
இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும் எப்பொழுதுமே தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
மேலும் இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழி இருக்கிறது என்று கூறுகிறார். ஏனெனில் லெனினின் பதப்படுத்தப்பட்ட மூளை இன்றும் மாஸ்கோவில்தானே இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றார்.
இதற்கெல்லாம் ஆதாரமாக அவர் பேசுவது லெனினின் பிரேத பரிசோதனை அறிக்கை தான். லெனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளை மிகவும் கடினமாகிப் போயிருந்தது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும், இதுவரை எப்படிக் கடினமாகிப் போனது என எவரும் சொல்லவில்லை என்பதாலே மர்மம் நீடிக்கிறது என்றும் லுரி சொல்கிறார்.