29.04.கி.ஆ2012தமிழாண்டு2043-இந்தியாவில் தற்போதைய சனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு எதிர்வருகிற ஆடி மாதம் அவருடைய பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில் புதிய சனாதிபதிக்கான பரிசீலனையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.இதற்காக, ஏற்கனவே சனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இதையடுத்து ஊடகத்தினர் அப்துல் கலாமை சந்தித்தனர். அப்போது அவர் தெரிவித்ததாவது, எனது பெயர் பரிசீலனையில் உள்ளதை நான் தவிர்க்கவில்லை.
இருப்பினும் சிறிது காலம் பொறுத்திருந்து, தான் இதற்கு பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். அப்துல் கலாம், கடந்த 2002-2007 வரை நாட்டின் குடியரசு தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.