குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

பாகிஸ்தானிலிருந்து ஒசாமா குடும்பம் நாளை நாடு கடத்தப்படுகிறது செவ்வாய்க்கிழமை, ஏப்ரல். 22. 2012,

 

இஸ்லாமாபாத்: அல் குவைதா இயக்கத் தலைவராக இருந்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நாளை நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல் குவைதா இயக்கத் தலைவர் பின்லேடனை 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. அதன் பிறகு ஒசாமாவின் 3 மனைவிகளும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தான் அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டு ஒசமா மனைவிகள் மற்றும் குழந்தைகள் மீது போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் எவ்வளவு விரைவாக அவர்களை நாடு கடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடந்து ஒசாமா குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரையும் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் ஒசாமா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

ஒசாமா பின்லேடனின் மனைவிகளில் இருவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் யேமனைச் சேர்ந்தவர். அனேகமாக அனைவருமே சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. யேமனைச் சேர்ந்த ஒசாமாவின் மனைவி மட்டும் சவூதி அரேபியாவிலிருந்து யேமனுக்கு அவரது 5 குழந்தைகளுடன் மீண்டும் நாடு கடத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.