இந் நிலையில் இவ் விலகலைத் தொடர்ந்து மேற்படி குழுவின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் இக் குழுவின் பயணம் திட்டமிட்டபடி இடம்பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
திட்டமிட்டபடி வரும் 16ம் நாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சிறிலங்கா வரவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசநாயக்க சீன செய்தி நிறுவனமான ‘சின்கிவா‘வுக்கு தெரிவித்துள்ளார்.
“இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நல்லெண்ணப் பயணம்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவினர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைச் சென்று பார்வையிடவுள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராயபக்சவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் சரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் பயணம் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிவதற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி தமிழ்நாடு முதல்வர் யெயலலிதா தமது கட்சியின் சார்பில் நியமித்த பிரதிநிதியை இந்தக் குழுவில் இருந்து விலக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.