இந்த நிலையில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அய்.நா. முன்னாள் தலைமைச் செய லாளர் கோபி அனான் முயற்சி மேற் கொண்டார். அந்த முயற்சிக்கு இப் போது வெற்றி கிடைத்துள்ளது. சிரி யாவில் அனான் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள் ளது. அங்கு தாக்குதல்கள் எதுவும் நடை பெற்றதாக தகவல் இல்லை. இது குறித்து சிரியா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் நடந்து கொள்வோம். அதே நேரத்தில் தாக்குதல்கள் தொடுக்கப் பட்டால் பதிலடி கொடுக்க உரிமை உண்டு என தெரிவித்தது. இதே போன்று பிரதான எதிர்ப்பு குழுவும், ராணுவம் தாக்கினால் பதிலடி தருவோம் என்று கூறி உள்ளது.
இதற்கிடையே சிரியா போர் நிறுத்த உடன்படிக்கையின் படி நடந்து கொள்ளுமா என்று மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.