இராமநாதபுரத்தில் உள்ள உச்சிப்புளியில் இயங்கும் ஐஎன்எஸ் பருந்து என்று அழைக்கப்படும் இந்தியக் கடற்படையின் விமானதளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து இந்தப் புதிய அணி செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இந்த ஆளில்லா உளவு விமான அணியை ஆரம்பித்து வைத்தார். ஐ.என்.ஏ.எஸ் 344 என்று அழைக்கப்படும் இந்த அணி, இந்தியக் கடற்படையின் மூன்றாவது ஆளில்லா உளவு விமான அணியாகும். இந்தத் தளத்தில் இருந்து முதற்கட்டமாக, இஸ்ரேலியத் தயாரிப்பான மூன்று உளவு விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
விரைவில் மேலும் இரண்டு உளவு விமானங்கள் இந்த அணியில் சேர்க்கப்படவுள்ளன. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டவை என்பதுடன், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆளில்லா உளவு விமானங்களை விடத்துல்லியமான படங்களையும், தகவல்களையும் வழங்கக் கூடியவையாகும்.
இலங்கையில் அதிகரித்து வரும் சீனத் தலையீடுகளை அடுத்து பிராந்திய ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வரும் நிலையிலேயே, இலங்கைக்கு மிகநெருக்கமாக இந்தியா இந்த உளவு விமான அணியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.