குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இந்தியத் தலைநகர் டெல்லியில் சிறிலங்காவில் போர்குற்ற விசாரணையினை வலியுறுத்தி பேரணி!

டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defense International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு , தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி பேராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை நடத்தியுள்ளனர்.  டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்று இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

டெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.டெல்லித் தமிழ் சங்கத்தலைவர் எம்.என்.கிருஸ்ணமணி மற்றும் Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் – சிறிலங்காவைப் புறக்கணி – சிறிலங்காவில் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற வாசகங்களைத் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில், தமிழர்களுக்கான நியாயமான தீ;ர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா, தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு நிறுத்தப்படவேண்டுமென கோரினார்.  இதேவேளை சிறிலங்கா தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டுமெனவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிபுரிய, அரச சார்பற்ற நிறுவனங்களை சுதந்திரமாக பணியாற்ற சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சிறிலங்காவின் தூதரகம் நோக்கி பேரணியாக போரட்டம் முன்னெடுகப்பட்டிருந்த நிலையில், டெல்லிக் காவல்துறையினரால் பேரணி இடையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  பின்னர், Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா அவர்கள், சிறிலங்காவின் தூதரகக்கு சென்று, தங்களது கோரிக்கை மனுவினைக் கையளித்து திரும்பியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.