இதனால் தலைநகர் மெக்சிகோ நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்ததையடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நடுக்கம் கண்டன.
நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் வந்து குவியத்தொடங்கினர்.
இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் உள்ள அகாபுல்கோ என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 மைல் அழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேத மதிப்பும் ஏற்படவில்லை என்று மெக்சிகோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு மெக்சிகோவில் குயரோ, ஒசாகா மாகாணங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.