குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

மீண்டும் சசிகலாவை மறுமணம் செய்து கொண்ட யெயலலிதா! நடராயன் யெலலிதா முறுகலால் ஈழத்தமிழர் நிதிஒதுக்கீடு நடந்தது. நன்மைக்காக இந்தக்குழுவினருக்கு நன்றிகூறுவோம்.

03.04.2012தமிழக முதல்வர் யெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராயன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் யெயலலிதா அறிவித்திருக்கிறார்.

 

இரு தினங்களுக்கு முன்பு சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் யெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், யெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அதிமுக நலனுக்கு எதிராகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கைகள், 24 ஆண்டுகள் வாழ்ந்த யெயல்லிதாவின் இல்லத்திலிருந்து வெளியே வந்தபிறகுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் சகிகலா குறிப்பிட்டிருந்தார்.

 

கடந்த டிசம்பர் மாதம், சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி யெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சசிகலா கணவர் நடராயன், உறவினர் ராவணன் உள்ளிட்டோர், நில அபகரிப்பு, பண மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

 

மேலும், கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, யெயலலிதாவுக்குத் தெரியாமல் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகங்களில் அவர்கள் பெருமளவு ஆளுமை செலுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.