24.03.2012-சீனாவில் சில இணையதள குறும்பர்கள் அந்நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக வதந்தியை பரப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தலைநகர் பீயிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், ராணுவ வாகனங்களும் உலாவுவது போன்ற படங்களையும் வெளியிட்டிருந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதளத்தை முடக்கினர்.
சீன சனாதிபதி கி
யின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைவதையடுத்து, துணை சனாதிபதி யி யின்பிங், புதிய சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சனாதிபதி பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான சீன கம்யூனிசுடு கட்சியில் பெரும் அதிகாரப் போட்டியே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், கட்சியின் முக்கிய பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போ யிலாய் என்பவரின் பதவி பறிக்கப்பட்டது.
இதனால் அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்விதம் ஆளும் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், ராணுவ புரட்சி வதந்தி அனைவரையும் நம்ப வைத்துள்ளது.