அமெரிக்க உளவுத் துறையான, சி.அய்.ஏ., யின் தென் அமெரிக்கா வுக்கான உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பிரையான் லட்டல். இவர் எழுதியுள்ள, கேசுட் ரோசு சீக்ரெட்சு - தி சி.அய்.ஏ., அண்டு கியூ பாசு இன்டலியென்சு மெசின்' என்ற தலைப் பிலான புத்தகம், அடுத்த மாதம் வெளிவர உள் ளது. இந்நிலையில், இப் புத்தகத்தில், கடந்த 1963 இல், அப்போதைய அமெ ரிக்க அதிபர் யான் கென் னடியின் படுகொலை குறித்து, முன்பே பிடல் காசுட்ரோ அறிந்து வைத் திருந்தார் என, லட்டல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1963இல், கென்னடியைக் கொன்ற குற்றவாளி லீ கார்வே ஓசுவால்டு, அப்படு கொலை சம்பவத்திற்கு முன், கியூபாவுக்கு வருவ தற்காக விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இது குறித்து, தனது ஊழியர் ஒருவரிடம் பேசிய பிடல் காஸ்ட்ரோ, ஓசுவால்டு, கென்னடியைக் கொல்வ தற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தெரிவித்ததாக, அப்புத் தகத்தில் லட்டல் குறிப் பிட்டுள்ளார்.பிடலுக்கு, கென்னடியின் படுகொலை முன்பே தெரிந்திருந்தும், அதைத் தடுக்க, அவர் எதுவும் செய்யவில்லை என, லட்டல் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரம், பிடல் தான் அப்படுகொலைக்கு உத்தரவிட்டது என, தான் கூறவில்லை என் றும் அவர் கூறியுள்ளார்