குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சிறிலங்கா தொடர்பில் இந்திய நிலைப்பாடு; தமிழக அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது இம்நடவடிக்கையில் யேயலலிதாவிற்கு யே! யே!!

19.03கி.ஆ2012தமிழாண்டு2043-யெனிவாவில் கொண்டவரப்பட்டுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் குறித்து, இந்தியாவின் உறுதியற்ற நிலைப்பாடு தொடர்பில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் யெயலலிதா அவசரமாகக் கூட்டியுள்ளார்.

யெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையும் அது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இக் கூட்டத்தை முதல்வர் அவசர அவசரமாகக் கூட்டியுள்ளதாக, தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவும் யெனிவா தீர்மானம் குறித்து நாளையதினம் தனது செயற்குழுவைக் கூட்டவுள்ளது.

இந்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக முடிவு ஒன்றை எடுப்பதுடன், யெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை தி.மு.க இந்தக் கூட்டத்தில் அறிவிக்கலாம் என நம்பப்படுவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.