யெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையும் அது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இக் கூட்டத்தை முதல்வர் அவசர அவசரமாகக் கூட்டியுள்ளதாக, தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதேநேரம், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவும் யெனிவா தீர்மானம் குறித்து நாளையதினம் தனது செயற்குழுவைக் கூட்டவுள்ளது.
இந்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக முடிவு ஒன்றை எடுப்பதுடன், யெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை தி.மு.க இந்தக் கூட்டத்தில் அறிவிக்கலாம் என நம்பப்படுவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.