27.02.கி.ஆ2012தமிழாண்டு2043காடுகளில் பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்களது பணிச்சுமை குறைந்து மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மூன்றில் ஒரு பகுதி காடாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் காட்டை மிக அதிகம் விரும்புபவர்களாகவும், காடுகளில் நெடுந்தொலைவுப் பயணம் செய்வதையும் விரும்புகின்றனர்.
இயற்கையை விரும்புபவர்களாக விளங்கும் இம்மக்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இவர்களின் ஆர்வம் மென்மேலும் அதிகமாக இருப்பது உறுதியானது.
காடு, பனி மற்றும் நிலப்பகுதிக்கான மத்திய ஆராய்ச்சி மையம்(WSL) நடத்திய, காடு கண்காணிப்பு சமூகப் பண்பாட்டு ஆராய்ச்சியின் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆராய்ச்சி கடந்த 1997ம் ஆண்டு முதல் இன்றுவரை, காடு மற்றும் வனம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனப்பான்மை எத்தகையது என்று அறிய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 95 சதவீத மக்கள், காடுகளுக்கு செல்வதினால் தங்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநரான கிறிஸ்டோஃபர் ஹெக் கூறுகையில், இயற்கையை விரும்பி மக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்வதாகத் தெரிவித்தார். மேலும் காடுகள் காற்றைச் சுத்தப்படுத்தி நல்ல காற்றை தருகின்றது, நிழல் தரும் மரங்களையும் உயிர்களை பாதுகாக்கின்றது என்று தெரிவித்தார்.