குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சீனா, இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர்

17.02.2012-இலங்கை - இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா இலங்கையில் தீவிரமாக ஊடுருவியுள்ளது. இது இந்திய- இலங்கையின் உறவில் பாரிய சிக்கலை ஏற்படுத்துமென இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் லகன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய, அனைத்துலக கருத்தரங்கில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில்  தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.  இதன்போது,  தமிழநாட்டில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியாவால் இலங்கைக்கு போர்த்தளபாடங்களைக் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே அப்போது ஏற்பட்ட இடைவெளியை, சீனா நன்கு பயன்படுத்தி கொண்டது.  போருக்குத் தேவையான ஆயுதங்களை தயக்கமின்றி வழங்கி, இலங்கையின் முக்கிய கூட்டாளியாக சீனா மாறிவிட்டது.

இதனால் தான், இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான், இலங்கையில் இந்திய ஆதிக்கம் தொடரும் என லகன் லால் மெஹ்ரோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக , 13வது சட்டத்திருத்தத்தைக் நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவுக்கு இலங்கை உறுதியளித்திருந்தது.  ஆனால், தற்போது திடீரென பின்வாங்குகிறது. இதனால், அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுக்ககள் முடங்கியுள்ளன.

இலங்கை 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனின், அது இந்தியா – இலங்கை இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லகன் லால் மெஹ்ரோத்ரா இந்திய வெளிவிவகாரச் செயலராகவும், கொழும்புக்கான இந்தியத் தூதுவராகவும், கம்போடியா மற்றும் இந்தோனேசியாவுக்கான ஐ.நா தூதுவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.