பகல் 11.35 மணிக்கு கூட்ட அரங்கிற்குள் காவல் துறை பாதுகாப்பையும் மீறி தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநில தலைவர் பூமொழி, தோழர்கள் வட்ட அமைப்பாளர் காமராஜ் ஆகியோர் திடீரென்று உள்ளே வந்தனர்.
இருவரும் நேராக துணை தூதரக அதிகாரி வடிவேல்கிருஷ்ணமூர்த்தி யிடம் வந்து, ``நீங்கள் தான் இலங்கை தூதரக அதிகாரியா? என்றனர். அதற்கு அவர் ஆம்... நான்தான். என்றார்.
உடனே இருவரும், ``தற்போது அகதிகளாக வாழும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அவர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள்?, இலங்கையில் தமிழர் கள் கொன்று குவிக்கப் பட்டார்களே அப்போது நீங்கள் என்ன செய்தீர் கள் என்றும், தமிழ் பெண் கள் பலவந்தமாக கற் பழிக்கப்பட்டு கொல்லப் பட்டனரே? அப்போது என்ன செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
இதுபோன்ற கேள்வி களை எதிர்பார்க்காத தூதரக அதிகாரி வடி வேல் கிருஷ்ணமூர்த்தி திணறிப்போனார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல்.. யார்..யார் இவர்கள்? என மற்றவர்களை பார்த்து தடுமாற்றத்துடன் கேட்டார். அப்போது அங்கிருந்த பிற அதி காரிகள், வடிவேல் கிருஷ் ணமூர்த்தியை அருகில் உள்ள அறைக்கு கூட்டிச் சென்று கதவை தாழிட் டுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரங்கில் பலத்த குரல் எழுப்பிய சத்தம் கேட்டு, பாதுகாப்பு பணி யில் ஈடுபட்ட காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காவல் துறையினர் பூமொழி, காமராஜ் ஆகியோரை அரங்கிற்கு வெளியே அழைத்து சென்றனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் நேற்று 50 காவல்துறை யினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத் திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் இதர நபர்கள் யார் வந்தாலும் அவர் களை காவல்துறையினர் கடும் சோதனைக்கு பின் னரே அனுமதித்தனர். பிரச்சினை ஏதும் நடந் திட கூடாது என்பதற் காகவே இதுபோன்ற நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்தனர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க நிறுவன தலைவரான பூமொழி சேலம் டவுன் காவல் துறையினருக்கு நன்கு அறிமுகம் ஆனவர். இப் படி பலத்த பாதுகாப் பையும் மீறி பூமொழி, காமராஜ் ஆகிய இரு வரும் கூட்டம் நடந்த அரங்கிற்குள் நுழைந் தது எப்படி என்பது காவல்துறையினருக்கே குழப்பமாக உள்ளது. இருவரையும் காவல் துறையினர், சேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரணை நடத்தினார்கள்.