அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிபுக்கு கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட் டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையைக் கூற வைப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கான அறி குறிகள் தென்படுகின்றன.ஜெனிவாவில் அடுத்த மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கு தீர்மானம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இந் நிலையில் சிறுபான்மை தமிழர் களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது.
ஐ.நா. மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இறந்த வர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று ஜனாதிபதி மகிந்த பாகிஸ்தானிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டு போரில் உயிர் பிழைத்தோர் இறப்புக்களை இன்னும் கணக்கெடுக் கிறார்கள் என்ற தலைப்பிலான நூல் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் இந்த கோடைகாலத்தில் லண்டனில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.