அதே பாணியில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை கேலி செய்யும் வகையில், தே. மு.தி.க.வினர் சுவரொட் டியை ஒட்டினர்.
இதைப்பார்த்த அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் சென்னை சாலி கிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ள விஜய காந்த் வீட்டுச்சுவரில், தே.மு.தி.க.வினர் சுவரில் ஒட்டினர். மேலும், அரு கில் உள்ள வீட்டு சுவர் உள்பட பல்வேறு இடங் களிலும் ஒட்டினர். அதே நேரத்தில், அங்கு வந்த 129ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் பாண்டியன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.சற்று நேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து விஜயகாந்த் வீட்டு சுவரில் ஒட்டியிருந்த சுவரொட்டியை கிழித் தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுவரொட்டி கிழிப்பு சம்பவத்தால் அப்பகுதி யில் அ.தி.மு.க.வினரும், தே.மு.தி.க.வினரும் குவிந்தனர்.வாக்கு வாதத்திலும் ஈடுபட் டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமரசம்செய்தனர். ஆனாலும்,காவல் துறையினர் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாமல், அ.தி.மு.க.வினரும், தே.மு.தி.க.வினரும் தனித்தனியாக விருகம் பாக்கம் காவல்துறையில் புகார் செய்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் பாண் டியன் அளித்த புகார் மனு வில், `முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழை கெடுக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
தே.மு.தி.க. சார்பில், அக்கட்சி நிருவாகி வி.என். ராஜன் அளித்த புகார் மனுவில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தாகவும், அவதூறாக பேசி யதாகவும் கூறியிருக்கிறார். இருதரப்பு புகார்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனராம்.