1071. |
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். |
1072. |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். |
1073. |
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். |
1074. |
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். |
1075. |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. |
1076. |
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். |
1077. |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. |
1078. |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். |
1079. |
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். |
1080. |
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. |